search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூரில் மழை"

    • வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அதிகாரிகள் விடுப்பு எடுக்காமல் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    • தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், விளைநிலங்கள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்தினர் கண்காணித்து வருகிறார்கள்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை இன்று (29-ந்தேதி) தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது.

    இதன் காரணமாக தென்பெண்ணை ஆறு, கெடிலம், கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கால் சிதம்பரம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதுதவிர கடலூர் மாவட்டத்தில் தொடர்கனமழை காரணமாக ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை முதல் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அதிகாரிகள் விடுப்பு எடுக்காமல் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், விளைநிலங்கள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்தினர் கண்காணித்து வருகிறார்கள். இதுதவிர வீராணம், பெருமாள் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • தொடர் மழை காரணமாக விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • தாழ்வான பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    கடலூர்:

    மத்திய வங்கக்கடலில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்த மழை கடலூர் நகரம், விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் நீடித்தது. விடிய விடிய பெய்த மழை இன்று காலையும் தொடர்ந்தது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் அவதிபட்டனர்.

    தொடர் மழை காரணமாக விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    ×